×

நரிக்குறவர் வீட்டில் துப்பாக்கி திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் மேட்டு காலனி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் நரிக்குறவர் மாவீரன். இவரது மனைவி அஞ்சலி(33), அப்பகுதியில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் வசித்து வருகின்றனர். அஞ்சலியின் தந்தை பொன்முடி (65), உரிமம் பெற்று குருவி சுடும் ஒற்றை குழல் துப்பாக்கி வைத்திருந்தார். இந்நிலையில், பொன்முடிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. தனது துப்பாக்கியை அஞ்சலியிடம் கொடுத்து விட்டு சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றார். வீட்டில் இரு தினங்களுக்கு முன் 2 சவரன் நகைகள், பணம் மற்றும் ஒற்றை குழல் துப்பாக்கி, செல்போன் ஆகியவை திருடுபோனது புகாரின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆவடி: அம்பத்தூர் சண்முகபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(31). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு கடந்த 21ம் தேதி குழந்தை பிறந்தது. விஜயகுமார், குரோம்பேட்டையில் உள்ள அவரது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், பணம், வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.  புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.திருவள்ளூர்: திருவள்ளூர் எம்.ஜி.எம் நகர் ஐஸ்வர்ய லட்சுமி தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன்(28). திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் அர்ச்சகர். நேற்று வழக்கம்போல் கோயிலுக்கு சென்றார். மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்து பீரோவில் இருந்த 22 சவரன், 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது. புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவை வைத்து விசாரித்து வருகின்றனர்….

The post நரிக்குறவர் வீட்டில் துப்பாக்கி திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Smiley Madu colony ,Samuthapuram ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...